Sunday, July 24, 2011

சாப்ட்வேர் சன்யாசிகள் - 2

ஒவ்வொரு வேலை செய்வோருக்கும் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சாப்ட்வேர் மக்களுக்கு செலவினங்கள் இன்னும் அதிகம். சிக்கனமாய் இருந்தால் வேலைக்கு ஆகாது. ஏன் வீடு வாடகைக்கு விடுவோர் கூட சாப்ட்வேர் மக்கள் என்றால் வாடகை பன்மடங்கு உயர்த்தியே கூறுகின்றனர். வாங்கும் சம்பளம் வரிக்கும் வாடகைக்குமே போய் விடும்.
சாப்ட்வேர் மக்களும் கடன் வாங்குகின்றனர், படித்த கடன், படிப்பதற்கு கடன், வீட்டு கடன், வாகனக்கடன் என்று. அந்த கடன்கள் ரத்து செய்யப்படுவதில்லை,  வட்டியுடன் அடைக்கப்படுகிறது. (நாங்கள் ரத்து செய்யுங்கள் என்று கேட்பதும் இல்லை)

அரசாங்கங்கள் விவசாயக்கடனை ரத்து செய்கிறது. அனால் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவரின் விவசாயக்கடனை ரத்து செய்வது முட்டாள் தனமல்லவா? சாப்ட்வேரின் தேக்கநிலையின் (recession) சமயத்தில், பலர் வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அப்போது யார் என்ன செய்தீர்கள்? நீங்கள் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கேட்கவில்லை. நாங்கள் கட்டும் வருமான வரியால்தான், இதர மறைமுக வரிகளால்தான், அரசியல்வாதிகள் சுரண்டி தின்க முடிகிறது, இலவசங்களை மக்கள் பெற முடிகிறது என்பதை சிறிதாயினும் உணர்ந்தால் அதுவே போதும்.

ஒரு திரைப்படம் ஒன்று பார்க்க நேர்ந்தது. பெரும்பாலான மக்கள் நன்றாக இருக்கிறது, அருமை என்று கூறிய படம். "தமிழ் M.A.". படத்தில் தமிழ் படித்த ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது போலவும், இந்த சாப்ட்வேர், கால் சென்டர்களில் வேலை செய்வோர் எல்லாம் சந்தோஷமாக வாழ்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. சாப்ட்வேர் மக்களாலா தமிழ் படித்தோர் கஷ்டப்படுகின்றனர்? இந்த உலகத்தில் வாழவா வழி இல்லை? அடுத்தவன் வாழ்கையை பார்த்து வயித்தெரிச்சல் படுவதுதான் படித்த தமிழுக்கு அழகா?

சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகள் இன்று அதிகரித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அனால் அதற்க்கு ஐ.டீ மக்கள் எவ்விதத்திலும் காரணம் இல்லை என்பதும் உண்மை. கொஞ்சம் யோசித்தால் இந்த உண்மை தன்னால் விளங்கும். அடுத்த வீட்டை பார்த்து பொறாமை பட்டது சமுதாயத்தின் தவறல்லவா?

ஒரு பெண்மணி கவர்ச்சியான ஒரு வசனம் எழுதிய டீ-ஷர்டை அணிந்து இருப்பார். படத்தின் கதா நாயகன் (அவனை இவ்வாறு அழைப்பது பொருந்துமா என்று தெரியவில்லை!!!) அந்த வசனத்தை படித்து விட்டு, அந்த பெண்ணின் மார்பகங்களை பிடிப்பார். "ஐ டார்" (எனக்கு தைரியம் உள்ளது) என்றும் கூறுவார். இதுவா தைரியம்? இப்படி செய்ததன் பின்விளைவை அவன் எதிர்கொள்வதை காட்டியிருந்தால் ஒரு வேளை அந்த கதா நாயகனையும், இயக்குனரையும் பாராட்டலாம்.

"அப்போ பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிந்து வெளியே வரலாமா?" என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம், வரலாம், வருவார்கள். நீங்கள் "ஐ டார்" என்று திரைப்படங்களில் வேண்டுமானால் செய்யலாம், நிஜத்தில் செய்தால், மூஞ்சி, மொகரை பெயரும். இன்னொரு சினிமா வசனம், "என்ன பொருத்தவரைக்கும் சப்பையும் ஒரு ஆம்பள தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்". இதை எழுதிய வசனகர்த்தாவிற்கு ஒரு சபாஷ். இதற்கும் சாப்ட்வேருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. சாப்ட்வேர் துறை ஆண்களை சாப்டாகவும் சப்பையாகவும் ஆக்கி விட்டது.

எப்படி? அடுத்த சந்நியாசத்தில் பார்ப்போம்.

(சந்நியாசம் தொடரும்..) 

No comments:

Post a Comment

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...