தாளம்: ரூபகம்
பல்லவி:
ஆடும் சிதம்பரேசா ஆலவாயுறை சோமேசா
தஞ்சை வளர் ப்ருஹதீசா தயைகூர்ந்து அருள்புரிவாய்
அனுபல்லவி:
அருவமாய் அருமருந்தாய் ஆருயிராய் அகிலமுமாய்
அம்பலத்திலும் ஏழை வேங்கடேசன் உள்ளத்திலும் (ஆடும்)
சரணம்:
அன்புடன் உனை நினைந்து அத்வைத இன்பம் கொண்டு
ஆதாரம் நீயென்று அடிமலரை நிதம் பணியும்
அடியாரவர் மனமதனில் அதியத்புத நடனமிட்டு
அல்லல்களை தீர்த்தோம் தீர்த்தோம் தீர்த்தோம் ஆனந்தம் தந்தோம் தந்தோம் என்று (ஆடும்)
good one..yours???!
ReplyDeleteஇறைவன் அருள். ஒரு நாள் காலை தோடி பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அதுவாய் உதித்தது.
ReplyDelete