Friday, July 1, 2011

அர்த்தமற்ற வார்த்தை - 1

பில்ட் அப் எல்லாம் கொடுக்காமல் நேராய் விஷயத்திற்கு வருகிறேன். இல்லை வேண்டாம்னு தோணுது.. அட பில்ட் அப் கொடுக்கிற அளவிற்கு இது பெரிய விஷயம் இல்லீங்க. ஊருள்ள எல்லாரும் ரொம்ப சகஜமா எல்லாத்துக்கும் உபயோகப்படுத்தும் வார்த்தை தான்.

காதல்..

என்னடா அர்த்தம் இல்லனு சொல்றே. இது எவ்ளோ பெரிய சமாசாரம் தெரிமா என்று சண்டைக்கு வரலாம் நிறைய பேர். எவ்வளவு யோசித்தாலும், பட்டி மன்றம் வைத்தாலும் இந்த வார்த்தைக்கு தெளிவான ஒரு விளக்கம் வருமா என்பது சந்தேகமே.

சரி இப்படி வைத்துக்கொள்வோம். இன்றைய சூழ்நிலையில் இந்த வார்த்தை அர்த்தமற்றதாக மாறிக்கொண்டு வருகிறது. காதலில் எவ்வளவு சதவிகிதம் காமம் கலந்து இருக்கலாம் என்பது எனக்கு தெரியாது. (யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) இன்றைய சூழலில் காமத்தில் சிறிது காதல் கலந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. (உண்மை காதல் ஜோடிகள் மன்னிக்கவும். ஊருக்கே தெரியும் சார்/மேடம் நீங்க மைனாரிட்டினு)

என்னடா நீ என்னவோ யோக்கியன் மாதிரி பேசுறே. நீ எந்த பொண்ணையும் பாத்ததில்லையா, காதலிச்சதில்லையானு கேக்கலாம். இதுக்குலாம் பதில் இல்லாமலா எழுத ஆரம்பிப்பேன்? வெயிட் பண்ணுங்க போக போக சொல்றேன்.

காதலர்கள் வேண்டுமானால் பொய்யாய் இருக்கலாம், காதல் பொய்யாவதில்லை. (எங்கயோ படிச்சதா இல்ல எனக்க தோணினதானு தெரில) காதலும் பொய்யும் ரெட்ட மாட்டு வண்டி மாதிரி. சேந்தே தான் போகும். காதலர்கள் அவர்களுக்குள்ளும் பொய் சொல்லிக்குவாங்க, அடுத்தவங்க கிட்டயும் பொய் சொல்லுவாங்க. உதாரணம்: "நாங்க ரெண்டு பெரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளோதான் வேற ஒன்னும் இல்லை"

"பொய்ம்மையும் வாய்மை யுடைத்து புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்" இது திருக்குறள். "பொய்ம்மையும் வாய்ம்மை யுடைத்து உலகினில் காதல் வேண்டும் எனின்" இது நம்ம திருஜொள்ளுவன் சொல்றதுங்க. (திருவள்ளுவர் என்ன அடிக்காம இருந்தா சரி :( :( )

ஒவ்வொரு காதலிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஒரு சில காதல் அபூர்வமாய் அர்த்தமற்று இருக்கும் (கதை இல்லாத தற்கால தமிழ் திரைப்படம் மாதிரி). அந்த அர்த்தமற்ற காதல் கூட அழகாகத்தான் இருக்கும் (விஜய் ரசிகர்களுக்கு விஜய் படம் மாதிரி).

இரு இரு, நீ காதல் நல்லதுன்னு சொல்றியா, இல்ல கெட்டதுன்னு சொல்றயானு கேக்குறது தெரியுது. ஆனால், அந்த பாழாய் போன காதல் நல்லது கெட்டது பாத்துட்டு வராது. தான் பாட்டுக்கு வந்து ஆப்பு வெச்சிட்டு போயிட்டே இருக்கும்.

காதல் டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் மாதிரி. ஒன்னு ௦0 இல்லையா 1. ஒன்னு உங்கள உச்சத்துல கொண்டு போய் உக்கார வைக்கும் இல்லையா அதல பாதாளத்துல தள்ளி உட்டுறும்.

குழப்பறேன்ல? எல்லாருமே குழம்பிதாங்க இருக்கோம் இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம. உங்களுக்கு அர்த்தம் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க. அர்த்தம் தெரிலையா, வாங்க சேர்ந்தே அர்த்தம் தேடுவோம்.

(அர்த்தத்தின் தேடல் தொடரும்)

4 comments:

  1. Macha great work da:) Kalkitta da nee:)Macha u rock all time :)

    ReplyDelete
  2. nandri nandri. ella paratukkalum enakku ookkam koduththa, kodukkum enathu sirantha nanbargalukkae uriyathu.

    ReplyDelete
  3. nitz akka.. yep anubhavam thaan. paarththathu, kettathu, padiththatu :) :)

    ReplyDelete

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...